Sunday, September 14, 2008

வாள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழ் மக்களைப் புறப்பொருள் வெண்பா மாலை புகழ்ந்து பேசும்.மலையிலிருந்து மண் தோன்றும் முன்னாலேயே வாளோடு-வீரத்தோடு-பிறந்தவர் தமிழர் என்று இதற்குப் பொருள் கொள்கிறோம்.ஆனால் இந்தக் கருத்து எல்லார்க்கும் உடன்பாடானதாக அமையவில்லை.சிலர்க்கு இது உயர்வு நவிற்சியாகத் தெரிகிறது.இந்தப் பாடல் வரியில் `வாள்`என்ற சொல்லுக்குப்`பேச்சு`என்னும் இன்னொரு பொருளும் உண்டு.அதன் அடிப்படையில் இந்த வரி,மலை தோன்றி மணல் தோன்றும் முன்பே -பேச்சோடு-தமிழ்மொழியோடு பிறந்தவர் தமிழர் என்று பொருள்படுகிறது.இது மிகப் பொருத்தமானதாகவும் அமைகிறது.

வாள்=1.சொல்லுகை(தொல்.எழுத்து.0.உரை) .பிறரால் சொல்லப்படும் புகழ்."வளைய வாளரா மீது"(தக்கயாகப்.௧௧௧.உரை).

வாள்தல்=சொல்லுதல்,பேசுதல்.

வாளாவிருத்தல்=பேசாது அமைதியாய் இருத்தல்.

வாய்வாளாமை=வாய் pesaamai. (மௌனம்).

வாள்+கு=வாட்கு->வாக்கு.

வாக்கு=வாய்ச்சொல்,புகழ்ச்சிச்சொல்.

SKT.voc.LATIN.vox,vocis.ENG.vocal.

வாளோடு புகழோடு- பிறந்தவர் தமிழ்ர் என்பது உண்மைதானே.