Monday, August 17, 2009

கொல்லை

பண்டைக் காலத்தில் முல்லை நிலத்திருந்த வானவாரிக் காடுகள் "கொல்லை"
எனப்பட்டன. புதிதாக உருவாக்கிய கொல்லை "இதைப்புனம்" என்றும் நெடுநாட்களாக
வேளாண்மை செய்துவரும் பழைய கொல்லை "முதைப்புனம்" என்றும் அழைக்கப்பட்டன.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். எனவே, 'முல்லை நிலக்
காடுகளைக் கொன்று (அழித்து) உருவாக்கிய நிலம் கொல்லை' என்று அறிஞர்
சிலர் கருதுகின்றனர். இக் கருத்து சரியானது அன்று.


"கொல்லுதல்" என்னும் சொல்லிற்கு 'அழித்தல், வெட்டுதல்' ஆகிய பொருள்களோடு
'உழுதல்' என்ற பொருளும் உண்டு. "முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்"
(குறுந்தொகை.155) "விதையர் கொன்ற முதையல்" (நற்றிணை.121) ஆகிய செய்யுள்
வரிகளில் "கொன்ற" என்னும் சொல், 'உழுத, உழுது பண்படுத்திய' என்ற பொருளில்
வருதல் காண்க. அதனையொற்றி, உழுவதற்குப் பயன்படும் உழுபடையும், "கொழு"
என்றும் "காறு" என்றும் பெயர்பெற்றன.
கொல் -> கொழு.
கொல் -> (கோறு) -> காறு.
ஒ.நோ : கொல் + தல் = கோறல்.
காறு - OE.scear. ME.schar. E.share.
GERMAN.schar,schaar.

No comments:

Post a Comment