Saturday, April 9, 2011

வேட்டை - பிற்குறிப்பு

"வேட்டை" என்னும் சொல் "வேள்" என்னும் 'விரும்புதல்' பொருளுடைய
சொல்லிலிருந்து தோன்றியதாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கருதுகிறார்.

வேள் = விருப்பம்.
வேள் -> வேண் = விருப்பம்.
வேள் -> வேட்டம் = விருப்பம், உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.
வேள் -> வேட்டை. (முதல்தாய்மொழி.பக்.167.)


'கன்னிவேட்டை', 'ஊன்வேட்டை', 'நரவேட்டை', 'வேட்டையாடுதல்', 'வேட்டையாடிக்
கொல்லுதல்' (எ-டு : முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களைச் சிங்களப் படைஞர்கள்
வேட்டையாடிக் கொன்றனர்.) முதலான தொடர்களை நோக்கும்போது, 'விரும்பிப்
பிடிப்பதே வேட்டை' என்ற கருத்து பொருத்தமானதாகத் தோன்றவில்லை;
'விரட்டியும் வெருட்டியும் பிடிப்பதே வேட்டை' என்ற கருத்தே
உறுதிப்படுகிறது.

"சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுது போக்கும்
சிறிய கதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!"
- பாவேந்தர் பாரதிதாசனார்.

ஒருகால் "வெருள்" என்னும் சொல்லிலிருந்து, (வெருள் -> (வேள்) -> வேட்டை)
என "வேட்டை"ச்சொல் தோன்றியிருக்கலாம்.

1 comment:

  1. உண்மை தான் நண்பரே

    சொல்லிலும் செந்தமிழனின் துயரைச் சொல்லி உள்ளீர்கள்

    ReplyDelete