Wednesday, April 1, 2009

ஒட்டியாணம்

பெண்கள் இடுப்பில் அணியும் பொன் அணிகளுள் ஒன்று ஒட்டியாணமாகும். இதன்
பழைய பெயர் "உடைஞாண்" என்பதாம். ஆண்கள் அரைஞாண் அணிதல்போலப் பெண்கள் அக்
காலத்தில் உடைஞாண் அணிந்திருந்தனர். ஆனால் உடைஞாண் பெரும்பாலும் பொன்னால்
செய்யப்பட்டதால் "உடைஞாணம்" எனப்பட்டது. "உடைஞாணம்" பேச்சுவழக்கில்
"உடையாணம்" என்று திரிந்து வழங்கியது.

"உடையாணம்" என்ற சொல் கன்னட தெலுங்கு மொழிகளில் "ஒடையாணம்" என்று மருவி,
"ஒட்யாணம்" என வழங்கத் தலைப்பட்டது. "ஒட்யாணம்" என்ற சொல்தான் இலக்கண
அமைதி பெற்று "ஒட்டியாணம்" என்று தமிழில் வழங்குகிறது. இன்றும் மலைஞால
மொழியில் "உடைஞாண்" என்றே உண்மையான வடிவில் வழங்குகிறது!

No comments:

Post a Comment